கண் மூடி தவமிருந்தால்

கண் மூடி தவமிருந்தால்
கடவுளே வருவார்...
காதலன் ஏன் வரமாட்டான்?

பெண்ணே உன் பொன்மேனி
வாடுவது அவனறிவான்..
சீக்கிரம் உன் கன்னமதில்
கனிமுத்தம் தருவான்..

பசலை நோய் உனக்கு மட்டுமல்ல
அவனுக்கும் கூடத்தான்..
இதோ வந்து விட்டான் கணையாழி
கொண்டு காந்தர்வ மணம் புரிய...

எழுதியவர் : ஜெய் ரெட்டி (6-Dec-18, 12:41 pm)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 317

மேலே