சித்திரம் பேசுதடி
அடி மயிலே
============
அம்மாடிாயோ
ஆத்தாடியோ/
கஞ்சி
களயம் கொண்டு
வஞ்சி
இவள் மெஞ்சையிலே...
கொஞ்சும் கொலுசும்
ஓசை எழுப்பையிலே....
என் நெஞ்சமும் தானாக
என்னைக் கெஞ்சையிலே....
நான் கொஞ்சம
உரக்கப் பாடையிலே .....
அவள் தலை
திரும்பிப் பார்க்கையிலே...
கஞ்சி ததும்பயிலே
வஞ்சி அவள் நடை
தளரையிலே ....
என் நெஞ்சி பதறியது
பயத்தினிலே.....
அள்ளி செருகிய
சேலையையும்/
தூக்கி இடுக்கிய
கூடையையும்/
தாங்கியே அவள்
இடையது சுமக்கையிலே..
கிங்கினி போல்
சிமிக்கி மணி/
சத்தம் இன்றி தானாக
ஆடையிலே....
பட்டுப் போன்ற பாதம்
பாத அணி இல்லாமல்
பாதையில் பதியையிலே....
பட்டன ஒட்டிக் கொண்டு/
மணல் முத்தம் கொடுக்கையிலே..
பொறாமையில்
வெந்தது என்
மனமடி மயிலே......