ஐயனை காண்போம்

ஐயனை காண்போம்
மனிதன் மாயையில் உழன்று தவிக்க
பிரம்மமே நீ என்பதை உணர்த்திட
புண்ணிய பாபங்களை இருமுடியாக்கி
பக்தியுடன் படி பதினெட்டைக் கடந்து
மகேசன் மகனை மலைதனில் காண
மண்டல காலம் விரதம் இருந்து
பொற்கோவிலில் ஐயனை கண்டு
பரவசத்தால் ஊனும் உயிரும் உருக
சரணம் சரணம் என்று கூவி அழைத்து
ஆத்ம நிவேதனம் செய்வோமே !

எழுதியவர் : கே என் ராம் (7-Dec-18, 4:08 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 76

மேலே