மரங்களை காக்கவேண்டும்
இரவு பகல் என்று சிறிதும் பாராது
உறங்காது அயராமல் விழித்துக்கொண்டு
கரிமலை வாயுவை தான் உட்கொண்டு
இனிதே நாம் வாழ 'பிராணவாயு' தரும்
நலந்தரும் மரங்களைத்தேடி தேடி
கானகமோ, பெருஞ்சாலைகள் இல்லை
மாநகர் தெருக்களோ என்று சென்று
அவற்றை நெஞ்சில் ஈரமில்லாது
வெட்டி சாய்க்கும் மானிடரே
இப்படியே மரங்களை அழித்துக்கொண்டிருந்தால்
அன்று 'டினோசார்' காணாமல் மறைந்துபோனதுபோல்
பசுமை நிரப்பும் மரங்களும் இல்லாமலே போனால்
மனிதனே நீ வாழ்ந்திடலாம் என்று எண்ணுகிறாயா
,