அகத்தியர் சொன்ன உயிர்களின் வரலாறு

உலகிலுள்ள ஜீவன்கள் பலகோடிகள் என்று நாமறிவோம்.. அதை வகைப்படுத்துகிறார் பதினெண் சித்தர்களில்
மூத்த சித்தர் அகத்தியர், தமிழ் படை த்த மகான் , தமிழ்க்கடவுள் கந்தவேள் முருகனின் தனிப் பெருஞ் சீடர், பொ திகைவாழ் கும்பக் குறுமுனிவர்.

பரம்பொருள் எனும் நமசிவாயம் அபரிமிதமான ஒப்பிலா, ஆற்றல் படைத்தவரென்று நாமறிவோம். அந்தப் பரம்பொருளெனும் பரமசிவம் ஒருதேவனை உண்டாக்கி அவனிடம் தன்சக்தியினை ஒப்புவித்து ஏற்றுக்கொள்ளும்படிச் செய்ய சதாசிவமோ ஆகாயத்தைமட்டுமே ஏற்றுக்கொள்ள முடிந்தது . அப்படித்தான் விசும்பின் அதிபதியானார் சதாசிவம் எனும் கடவுள். மீண்டும் பரம்பொருள் மகேஸ்வரனை படைத்துண்டாக்கி அவரிடம் எஞ்சியப்பகுதியை ஒப்புவிக்க அவரால் காற்றை மட்டுமேக் கையகப் படுத்திக் கொள்ள முடிந்தது. இதனால் பரம்பொருள் மீண்டும் தன்அம்சமாகிய ருத்ரனைப்படைத்து இதேபோல் செய்ய அவரால் உஷ்ணமேனும் பெருந்தீயை மட்டுமேக் கைக்கொள்ள முடிந்தது . பின் பரம்பொருள் தன் அம்சமில்லாத ஒருத்தேவன், விஷ்ணுவை உண்டாக்கி அவரிடம் எஞ்சிய சக்த்தியை ஒப்புவிக்க அவரால் ஜலமேனும் தண்ணீரை மட்டுமே ஏற்க முடிந்ததாம். எஞ்சியிருந்த பிருத்திவி எனும் மண்ணைத் தனது அம்சமில்லா அயன்எனும் பிரம்மதேவனிடம் ஒப்புவித்துக் கண்காணிக்கச் செய்தாராம். பரபிரும்மம் எனும் மகாதேவன் பிரபஞ்ச நன்மைக்காக மோனநிலையில் ஆழ்ந்தாராம். இந்தப்பஞ்ச பூதங்களின் அதிபதிகள் பரம்பொருளை அறிந்தாரில்லை என்பதை விளக்கும் கதையே பிரும்மாவும் விஷ்ணுவின் கதை. மகா பிரளயத்திற்குப்பின் திருப்பாற்கடலில் புதிதான விஷ்ணு உண்டாக அவரின் தொப்புள் கொடியில் பிரும்மன் உண்டானாராம். இந்த இருவருக்குள் யார் பெரியவர் சிறியவர் என்ற போட்டி உண்டாக பரம்பொருள் அசரரியாய் தனது பாதம் அல்லதுத் தலை யைக் காண்பவரே உயர்ந்தவரென்றாராம். அயன்எனும் பிரும்மா மற்றும் மாலும் தமக்குக் கட்டளையிட்டவர் தம் இருவருக்கும் மேம்பட்ட பரம்பொருளென்று உணராதிருந்தனர். ஆக, அயன் மால் இரு தேவர்களின் கர்வத்தை போக்கவே பரமன் தோன்றி அவர்களை நல்வழிப்படுத்தினார் என்பதுப் புராணக்கதை.

இதன் பிறகு பிரம்மன் தம் குட்டித்தேவதைகளுடன் உயிர் படைக்கும் தொழிலையும் மாலவன் அக்னி வருணன் வாயு, இந்திரன்,மற்றும் முப்பத்து முக்கோடித் தேவர்களின் அதிபதியாகி உலகின் உயிர்களையும் பயிரைக்காக்கும் காக்கும் கடவுளானார். ருத்ரனெனும் சிவன், நந்தி, கிம்புருடர், கின்னரர், சித்தர்கள்,எம கிராதகர்கள், பூதகணங்கள், யட்சர்கள் அரக்கர்கள் இன்னும் பல சேனைகளை வைத்து அழிக்கும் தொழிலைச் செவ்வனேச் செய்துவரும் கடவுளாவார். மகேஸ்வரன் காற்றின் அதீத தேவனாகவும் . விசும்பு, விசும்பின் பால்வெளி மண்டலங்கள் பால்வெளியின் அண்டக்கோள்கள் அணைத்து விண்மீன்களின் தேவனாக சதாசிவனும் அமைந்தார்கள். அமர்த்தியவர் பரமசிவனே.

பிரம்மன் உயிர்களின் பிண்ட உற்பத்தி அல்லது பிண்டோற்பத்தி எதன் அடிப்படையில் நடைபெறுகிறது என்பதைச் சற்று கவனியுங்கள். ஆண் பெண் குறிகளின் வெளிப்பாடான விந்து, நாதங்கள் தாய் தந்தையர் வெளிவிடும மூச்சும் அதன் காலநேரங்கள், ஆதித்தச், சந்திரகலை (பிறைகள்) களுக்கேற்பவும், நவக்கிரக வீடுகளின் அமைப்பு பார்வை, நட்சத்திரத்தாக்கம் சூரிய சந்திர கிரகணங்கள் அமைப்பின்படியும் நான்குக் கருக்கேந்த்திரமான கருப்பை, முட்டை வியர்வை, விதையென்பவைகளில், உடலுயிர் ஒன்று சேர்ந்து வளர்கிறது. இந்தப் பலவகைப்பட்டக் காரணங்களாலே பிறக்கும் உயிர்களுக்கு முகம் உடலமைப்புகளும், தரம், குணாதிசயங்களும் ஒன்றுக்கொன்று மாற்றங்களுடன் வேறுபட்ட தாக பிறக்கிறது வளர்கிறது. அப்படித்தான் தகுதிகள் கிடைக்கிறது என்பதே உண்மை. இந்த மேற்குறிப்பிட்ட பிறப்பும் தகுதியும் முன்வினைப் பயன்படி அந்தந்த நேரம் கலை கிரகச்சாரம் எனப் பலவகைத் தாக்கங்களால் நிகழ்வதாக சித்தர்கள் எழுதிவைத்திருக்கிறார்கள். பிறப்பு என்பதே முற்பிறப்பில் ஒருவன் வாழ்ந்த செய்த ( கர்மா ) செய்கை யினாலேதான் விதவிதமான
ஒருவன் ராஜாவாகவும் , ஒருவன் சேவகனாகவும், ஒருவன் வீரனாகவும் , ஒருவன் கோழையாகவும், அழகு அருவருப்பும், அறிவாளி மூடன் என எல்லா எதிர்மறைக்கும் மனிதன் முதல் எல்லா உயிர்களும் ஆட்பட்டு அதற் கேற்ற மரியாதை கிடைக்கிறது. " குலம், கோத்திரம், குடும்பம், அழகு, அறிவு, நடத்தை குணம், இன்ன பிறவெல்லாமும் அமைகிறது. இப்படி நடைபெறுவதை மனிதனால் மாற்ற இயலாது, அதைப்புரிந்து கொள்ளவும் முடியாது. " ஆனால் எதையும் தெரியாது, தெரிந்துகொள்ள முற்படாது, படிக்காது, படித்தாலும் ஒத்துக்கொள்ளாது பகுத்தறிவாளன் என்ற இருட்டில் மறைத்து மனித வர்கத்தையே கெடுத்துச் சீரழிக்கிறான்.

ஒருவன் எந்தவீட்டில் பிறக்கிறான் என்பதும், அவன் பெறுகின்ற அறிவும், உடல் தேஜஸும், அவன் பெறுகிற தகுதிகளும் முன் பிறப்புச் சம்மந்தப்பட்டது. ஒரேவீட்டில் பிறந்த பலருள் ஒருவன் அரசுச் செயலாளராகவும், ஒருவன்குமாஸ்தாகவும், ஒருவன் மேடை நடிகனாகவும் , ஒருவன் கேவலமான வாழ்கை நடத்து பவனாகவும் இருப்பது இதனால்தான்.


நான்குவகை யோனியில் எழுவகைப் பிறப்பாகும். அவைகளாவன1 தேவர் 2 ,மானுடர், 3. மிருகம், 4 பட்சி, 5.நீர்வாழ்வன, 6 ஊர்வன,7 தாவரமுமாகும்.
அகத்தியரின் நூலானபரிபூரணம் 1200 ல் சொல்வதாவது

திறமாக இன்னமொரு சூட்சங் கேளு
தீர்கமுள்ள புலத்தியனே மார்கவானே
உரமாக ஏழுவகைத் தோற்றந்தானும்
உத்தமனே நாலுவகை யோனியாச்சு
பரமான நாலுவகை யோனிதன்னில்
பக்குவமா யெண்பத்துநாலு நூறாயிரம்
திறமான முகபேத முண்டாச்சப்பா
நேர்மையுட னிதுவிபரஞ் சொல்லக்கேளு (491)


கேளப்பா தேவர்பதினால் நூறாயிரம்
கிருபையுள்ள மானிடர்ஒன் பதுநூறாயிரம்
சூழப்பா மிருகமது பத்துநூறாயிரம்
சுருக்கமான பட்சியது பத்துநூறாயிரம்
வாளப்பா நீர்வாழும் சாதிமுகபேதம்
வகையுடனே பத்து நூறாயிரமதாகும்
நாளப்பா ஊர்வன சாதிபதினொன்று
தன்மையுள்ள தாவரமு மிருபதுதான்பாரே (492 )

மானிடர்க்கு 9 நூறாயிரம் அதாவது 9 லட்ச முகபேதமென்று அகத்திய பெருமான் குறிப்பிட்டுச் சொல்கிறார். அதாவது உலகிலுள்ள மொத்த மக்களுக்கும் இருக்கும் முகவமைப்பு மொத்தம் 9 லட்சத்தில் ஏதாவது ஒன்றில் ஒத்துப்போகும்படி அமைந்துள்ளது என்கிறார். அதாவது உலகின் மொத்த ஜனத்தொகை 1000 கோடியாக இருந்தால் ஒருவனைப்போன்ற முகவமைப்பு 120 பேருக்கு இருக்குமென்கிறார். இதுபோலவே அணைத்துத் தேவர், மிருகம், பட்சிகள், நீர்வாழ்வன, ஊர்வன, தாவரங்கள் வரையுள்ள ஜீவராசிகளுக்கும் பொருந்தும் என்கிறார்.

மேலும் அகத்தியர் ஒரு ஜென்மத்தில் மனிதனாக இருந்தவன்பலமுறை அது 7 முறையாகவும் இருக்கலாம் அதற்குக் குறைவாகவும் மனித ஜென்மம் எடுக்கலாம். மனித ஜென்மம் முடிந்து மறு ஜென்மத்தில் தேவர், மிருகம், பட்சிகள், நீர்வாழ்வன, ஊர்வன, தாவரங்கள் இவற்றில் ஏதாகிலும் ஒன்றாகத்தான் பிறப்பான் என்றும் கூறுகிறார். மனிதன் மீண்டும் மனிதனாகவும் பிறப்பான் என்ற குறிப்புகளும் உள்ளது. கல்லாகவோ மண்ணாகவோ இருப்பது ஜடப்பொருள்கள் உயிற்றவைகளாம். அவைகளுக்குப் பிறப்புமில்லை எனலாம்.

மனிதனோ அல்லது, தேவர், மிருகம், பட்சி, நீர்வாழ்வன, ஊர்வன, தாவரமாக இருந்து மீண்டும் அவரவர் செய் தவத்தால் பூமிதனில் மானிடராய் பிறப்பார் என்கிறார். அப்படிப்பல்வகை உயிர்கள் மனிதராகப் பிறந்தால் எப்படிப்பட்ட குணமாக இருப்பார்கள் என்றும் அகத்தியர் வெளிப்படுத்துகிறார் படியுங்கள் .. தேவராக இருந்து மனிதராகப் பிறப்பவன், கலை, யோகநிஷ்டை, கிருபையுடன் சிவன் சக்திப் பூசை, அன்னம் சொர்ணம் இவற்றை தானமாகக் கொடுப்பான், குளம் ஏரிகள் அமைப்பானாம்.

மனிதனாக இருந்து மீண்டும் மனிதனாகப் பிறந்தவன் கர்வம் நீங்கித் தவம் செய்வான்,அறுசுவையை அன்பர்க்கீவான், வயதில் மூத்தோரையும், அறிவாளிகளையும் போற்றுவான்.

மிருகமாக இருந்து மனிதனாகப் பிறந்தவன் சண்டை,முரண்டுகள் செய்வான், தனையறியா வார்த்தை விடுவான். தானம் , தருமம் கொடுக்கான், முன்பின் பாரானாம்

.பட்சியாய் இருந்து மனிதனாய்ப் பிறந்தவன்பசித்தோருக்கு உணவீயான் .வெறும் பேச்சுப் பேசித்தெருத் தெருவாய் அலைவான். நல்லதைக் காதில் வாங்கான். வெட்கமில்லான், நாட்டமில்லாப் பறப்பான்.

நீரில் வாழ்ந்துப் பின் மனிதராய்ப் பிறந்தவர் தெருவெல்லாம் குலைத்து நிற்பான். சாடிசொல்லிக் கோள்மூட்டி சண்டை செய்வான். கொலைக் களவு சதி செய்வான்..குருமாரைப் பழிப்பான் . நல்லுறவைப் பிரிப்பான்.

ஊர்வனத்தார் மனிதராய்ப் பிறந்தோருக்கு பக்தியும் இருக்காது புத்தியுமிருக்காது .பிறர் இகழும்படி கெட்டபேச்சைப் பேசுவான். தன்மையும், திண்மையும் இருக்காது.

தாவரமாயிருந்து மனிதனாகப் பிறந்தவன் குணங்க்கேளும் நல்ல இன்பங்கள் செவியிற் கேளான். இன்பம் துன்பம் இரண்டுக்கும் வேற்றுமைத் தெரியாதவன். சிவதங்கள் செய்யமாட்டான். வேஷமிட்டுப் பொய்ப்பேசி நடிப்பான். வனாந்திரக் காடுகளிலே குடிப்புகுவான். இவற்றைக்கொண்டு இன்னின்ன குணத்தார் இன்னின்ன முன்பிறவியினர் இப்போது மனிதராய்ப் பிறந்துள்ளார்கள் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

பரவட்டும் முன் சித்தர் கண்டு பிடிப்புகள்

எழுதியவர் : பழனிராஜன் (10-Dec-18, 8:44 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 378

மேலே