அழகு தான்
தனிமையில் இருப்பதும்
மெளனமாய் இருப்பதும்
அழகுதான்
சிந்தையை தூண்டி
சாதிக்க வைப்பதும்
அழகு தான்
மனமது புண்படாமல்
அன்பின் வழி பயணித்தலும்
அழகு தான்
இயன்றவரை
ஈந்து இன்பம் காண்பதும்
அழகு தான்
உறவுகளை நாடி
ஒன்றுகூடி மகிழ்வதும்
அழகு தான்