பொருள் தேடி

ஏதோ ஒரு அறையில் அமர்ந்திருந்த என் தனிமை
என்னை தனிமையாக்கி என் உருவத்தை அணிந்திருந்தது
அதன் இதய துடிப்பின் வான் பிளக்கும் சத்தம்
என்னுள் எழுந்த ஒரு கவிதை
அந்த கவிதையின் பொருள் தேடி
புறப்பட்டது புத்தகத்துக்குள் அல்ல மேகத்துக்குள்
விடை கேட்க விலகிச் சென்றது மேகம்.
வானம் தெரிந்தது
விடை கேட்க உள்ளழைத்தது வானம்.
பிரபஞ்சம் தெரிந்தது
பிரபஞ்சத்தின் தொலைவில் அதிக கவிதை
அருகில் சென்றது பிரபஞ்சமே கவிதையில்

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (11-Dec-18, 3:22 pm)
சேர்த்தது : AKILAN
Tanglish : porul thedi
பார்வை : 1201

மேலே