கனவுக்காதலியே -
இலகிய இதயத்தை
இருக்கி அனைத்தபடி
இரவு முழுதும்
என்னை உலுக்கி எடுத்தவளே
உறங்கா விழியில்
உலவும் நிலவே
குரங்கின மனதை
நிலைநிறுத்திய கனவே
நீ வரும்,
கனவு காவியத்தை
படித்து முடிக்கும் முன்னே
கருத்த விழிகள் ரெண்டை
விடியல் திருடியதே
இனித்த இரவுகளெலாம்
கன்னி நீ வரும்
கனவில் கழித்துவிட
காதல் நிறைந்த மனம்
உன் பாதம் தேடுதடி
மதி வரும் வீதி என்று
அதிகாலை சாலையோரம்
நானும் விழித்திருந்தேன்
பனி விழுந்து கரைந்த ஈரம்
மெல்ல மெல்ல காய்ந்தும், அன்பே
உன்னை இன்னும் காணவில்லையே
என்னை உருக்கும் காதல் தீபமும்
இன்னும் ஏனோ அணையவில்லையே...
--- கல்லறை