உனக்கே உனக்காய்
ஆயுள் வரை உன் இமைகளின் செல்களுக்குள் ஒளிந்திட ஆசை..,
உன்னுடனான என் கணங்களை அர்த்தமானதாக்க..!
உன் ஒற்றைவிழிப் பார்வையும் உணர்த்திவிடும்.., ஒட்டுமொத்த அன்பை..,
உன் பயணங்களில் நிழலாய் பின்தொடர நினைக்கும் என் உள்ளம்..,
நீயற்ற என் நொடிப் பொழுதுகளில் மரணத்தின் வாயில்களுடன் சற்றே உரையாடி வரும் என் மனம்..!
உன் நினைவுகளின் மீட்டல்கள்.., கழுத்தை நெறிக்கையில்.., அன்னையைத் தேடும் இளம்பிள்ளையாய்..., கட்டிக் கதறிட நினைத்திடும் என் மனம்..!
உன்னுடன் கடந்திடவே என் நொடிகளும் தவமிருக்கும்..!,
உன் தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன் ...!
முடிந்தால் தந்துவிடு..,
என் பிறவிப் பயனை அடைந்திடுவேன்..!