கரைய முடியாது

நிலவே நிழலே
என்னை பின் தொடராதே
நான் உங்களுக்குள் கரைய
முடியாது

நான் பாறையை விட
இறுக்கமானவன் .
இயற்கை முடிந்த
இடத்தில தொடங்கியது
எனது வாழ்கை

அதனால் என்னை பின்தொடராதே
என்னை பின் தொடர்ந்தால்
எனது ஆசையின் எச்சங்கள்
நிறைவேறுவதற்குள் உனது பிரபஞ்ச
உறவை இழந்து விடுவாய்

நான் உங்களை ஒரு நாள்
பின் தொடரலாம் அல்லது
உங்களுக்குளே கரையலாம்
அன்று நான் இறந்திருப்பேன்
உண்மையில் அன்று தான்
நான் பிறந்திருப்பேன்

அது வரை என்னை பின் தொடராதே
ஏனென்றால் நான் மனிதன்...........................

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (13-Dec-18, 3:31 pm)
சேர்த்தது : AKILAN
Tanglish : karaiya mutiyaathu
பார்வை : 149

மேலே