அவளும் நானும்
அவள் அழகில் அதிசுந்தரி
நடையில் அவள் அன்னம்
ஆடலிலோ கோல மயில்
பாடினால் அவள் சோலைக்குயில்
குணவதி அவள் குணத்தில் குணசுந்தரி
அழகென்று சொல்லும்படி இல்லா என்னை
இவ்வாறாணங்கு விரும்புவது எப்படியோ
என்று நினைத்த நான் அவளிடமே
இதை கேட்க, அவள் சொன்னாள் உன் குணத்தால்
'உன்னை நான் விரும்புகின்றேன்
உன்னோடு பேசிப்பார்த்த நான்
கள்ளமில்லா உன் இதயத்தை விரும்புகின்றேன்
உன் இதயம் என்னும் கண்ணாடி என்முன்னே.........
அதில் என்னையே நான் பார்க்கையிலே
உன் இதயக் கண்ணாடி என் அழகை விஞ்சியதே 'என்றாள்
குணத்தைப் பார்க்க முடிவதில்லை
ஆனால் அன்பே உன் குணத்தால் என்னை
இல்லை என் இதயத்தை தொட்டுவிட்டாய் ' என்றாள்