அழகிய காதல் கவிதையின் ஆரம்ப வரிகள்

பவழ மல்லி காம்புபோல்
அழகிய இதழ்களில் முல்லைகள் சிரிக்கும்
அவள் வருகைக்காக காத்திருந்த
ஆரஞ்சு வண்ணக் கதிர்கள் விரிந்த அந்திப் பொழுது
அந்த அழகிய வேளையில் யதேச்சையாக நானும் நுழைந்தேன்
அழகிய காதல் கவிதையின் ஆரம்ப வரிகள்
அந்த அஸ்தமன வேளையில் என்னுள் உதயமாயின !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Dec-18, 7:04 pm)
பார்வை : 112

மேலே