தரையில் வாழும் மீன்கள்

சில
ஒப்பற்ற ஓவியங்கள்
ஒட்டடை அறையில்
ஓரமாய் கிடத்தப்பட்டிருக்கலாம்...

சில
கல்லூரி காலத்தின்
காவிய கவிதைகள் வெறும்
கட்டு காகிதமாய்
கரையான் அரித்துக்கொண்டிருக்கலாம்...

சில
விளையாட்டு போட்டியில்
வென்ற கோப்பைகளெல்லாம்
வீட்டின் அலமாரியில்
கவிழ்ந்திருக்கலாம்...

சில
படித்து முடித்த
பாட புத்தகங்கள்
பரனையில் வெறுமனே
அடுக்கப்பட்டிருக்கலாம்...

சில
சங்கீத சாரிர
சுரதியெல்லாம்
சமயலறையில் மட்டுமே
சாதகமாகலாம்...

சில
கெட்டிக்கார பேச்சுகளெல்லாம்
வெட்டி பேச்சில் வீணாய்
போய்க்கொண்டிருக்கலாம்...

ஏணிகள் ஏறா
பல முகங்கள்
தரையில் வாழக் கற்றுக்கொண்ட
மீன்களாய் இருக்கலாம்

எழுதியவர் : சிவா. அமுதன் (14-Dec-18, 9:37 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 237

மேலே