காதலில் தோல்வி
நிலைக் கண்ணாடிமேல் வந்து
வீழ்ந்ததோர் கல் ............
நொறுங்கியது கண்ணாடி
சேர்க்கமுடியாது போனது
அதுபோல் சந்தேகத்தால்
அவன் என்மீது தொடுத்த வார்த்தைகள்
உள்ளத்தில் அவன்மீது நான்கொண்ட காதலை
தூள் தூளாக்கியதே .............
பொய்யான காதல் அவன் என்மீது கொண்ட காதல்
என்று மனம் சொல்ல ..............
இதுதான் விதியோ என்றெண்ணி
காதலில் தோல்வியை ஏற்றுக்கொண்டேன்
மீண்டும் காதலைத் தேடி அலையாது என்னுள்ளம் ;
கலங்கிய மனதை மீண்டும் ஒருநிலைக்கு கொண்டுவர
இப்போது நான்...................