அடர்மிகு அழகியே

பவழக்குவியலில் பார்த்தெடுத்த பவழமே
தேவதைகளின் கூட்டத்தில்
தேர்ந்தெடுத்த சித்திரமே
கதிரவன் ஒளியினை
கண்ணில் கொண்ட பெண் நிலவே
உன்னை நான் கண்ட முதல்
பிணியாச்சு என் மனமே
உண்மையை சொல்வதென்றால்
ஊண் உறக்கம் இல்லையடி
அடர்மிகு அழகியே
இடர் தொலைக்க வருவோயோ - இல்லை
எல்லாப் பெண்களைப் போல்
எட்டி நின்று பார்ப்பாயோ !
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (19-Dec-18, 10:42 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 521

மேலே