தொலைபேசியும் காதலும்

தொலைபேசியின் மறுமுனையில் ஓர்
கனிவான குரல் இனிய குரல்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டியது
ஹலோ என்றான் ,இவன் குரல் கேட்டதும்
அந்த இனிய குரலில் ஓர் தழுதழுப்பு,
அவன் மீண்டும் ஹலோ என்றான்
பதில் இல்லை ஆனால்
அவள் இணைப்பில் இருந்து விலகவில்லை புரிகிறது .
நான் இணைப்பைத் துண்டித்தேன்.
இரண்டு நிமிடம் கழித்து தொலைபேசியில்
மணி ஒலித்தது .
மீண்டும் அதே பணிவான குரல்
அவன் ஹலோ / நீங்கள் யார் என்றான்
ஹலோ/ என்னை உங்களுக்கு தெரியாது ஆனால்
உங்களை நான் பலதடவை பார்த்தேன்
கள்ளமற்ற உங்கள் பார்வையும்
மற்றவர்களுடன் பழகும் அப்பழுக்கற்ற தன்மையும்
நற்குலத்தில் பிறந்த ஒழுக்கமும்
கண்டு வியந்தேன்
பார்த்தேன் பலதடவை புரிந்தேன் உங்களை
இதனால் என் மனம் ஏதோ காதல் வயப் பட்டதோ
யூகிக்க முடியவில்லை .
என்ன நினைத்தாளோ
அத்துடன் இணைப்பை துண்டித்து விட்டாள்.
அவள் தொலைபேசி எண்கள் மட்டும் இவன் கையில்
மீண்டும் அழைப்பு வருமா/ வருமா/ என்று இவன்....

எழுதியவர் : பாத்திமாமலர் (19-Dec-18, 11:42 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 328

மேலே