செப்பேலோ ரெம்பாவாய்

கோல வெழிலனைக் கோயிலுறை மாதவ
மாலவனை மண்ணையுண்ட மாயனைச் சென்றுதொழ
பாலைக் கறக்கும் பசுக்களும் கூடின;
சோலைக் குயில்கள் சுகமாகக் கூவின
காலை மலர்ந்ததே; காற்றில் பனங்குருத்
தோலைகளு ராய்ந்தே ஒலியெழுப்பக் கேட்டிலையோ?
சேலை யுடுத்தித் திலகமிட்டுப் பூச்சூடி
சீலத்து டன்நாமம் செப்பேலோ ரெம்பாவாய் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Dec-18, 4:42 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 29

மேலே