விதியா விதியா
இயற்றிய சட்டங்கள்
இறைவாக்கா?
ஆராய்ந்து,ஆய்ந்து
இயற்றும் சட்டம்
உடைபடும் அல்லது
உதைபடும்
என்பதாக இருக்க
உதைபடும் சட்டம்
எதற்கு?
உடைபடும் சட்டம்
எதற்கு?
பொதுவாய் ஒரு
சட்டம்
பிறப்பு இறப்பு
இதற்கும் இங்கே
சட்டதிட்டம்
ஆனாலும் விதி
மீறல்
விதியின் மீது
பழி
விதியா? அல்லது
விதியா?