பேரன்பு

மழலைகளின் மனதில்
மகிழ்ச்சியை நிலை நாட்டி
தன் சுகம் மறந்து
தாளா துயரம் பட்டாலும்
வளர்த்து ஆளாக்கி
அவர்களின் மகிழ்ச்சி கண்டு
தள்ளாத வயதில்
தனிமையில் விட்டு விட்டாலும்
எங்கிருந்தாலும் வாழ்க
என வாழ்த்தி
என்றேனும் ஒரு நாள்
காண வந்திடுவர்
என எண்ணி எண்ணி
கண்ணீர் உகுத்து
கனிவுடன் காத்திருப்பர்
கவலை தோய்ந்த முகத்தோடு...!!!

எழுதியவர் : உமாபாரதி (30-Dec-18, 5:09 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 94

மேலே