யாழிசையின் ராகங்கள் கேட்கிலையோ என்னவளே - - - -- சக்கரைவாசன்

யாழிசையின் ராகங்கள் கேட்கிலையோ என்னவளே - - - - - சக்கரைவாசன்
**************************************************************************************************************

யாழிசைகள் ஏறிறங்கி மாற்றமுற்று
எண்ணிலா ராகமெழக் கேட்கிலையோ ?
யாழினை மீட்டாக்கால் மென்சுரங்கள்
தூங்குதல்போல் ஓய்ந்தே கிடந்தனையோ ?
வாழ்விறக்க ஏற்றமெல்லாம் வையகத்தில்
வாய்த்தபடி வாழ்ந்துணர்ந்தேன் வார்குழலீ !
வாழ்வே அவனென்று வந்துணர்த்தும்
வாழ்வானைப் பாடேலோர் எம்பாவாய் !

எழுதியவர் : சக்கரைவாசன் (31-Dec-18, 4:32 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 64

மேலே