ரகசியம்

அன்பு தன் குழப்பங்களை தன்னுள் அடக்கி
தன் பெரியப்பா வீட்டிற்குள் நுழைந்தான்.
தன் குழப்பங்களைத் தன்னுள் வைத்துக் கொண்டு அன்று இரவைக் கடக்க
முயற்சித்தான்.

அன்றும் அவன் ஜன்னல் ஓரங்களில் தூக்கம் வராமல் அமர்ந்து கொண்டிருந்தாள். வழக்கம்போல் பெரியப்பா வீட்டின் கதவை தாழிட்டு விட்டார். பின்புற கதவை அடைத்து விட்டார்.
ஜன்னல் கதவு அடைபட்டிருந்தது ஆனால் தூக்கம் வரவில்லை. அன்பு தன் வானொலியில் பாட்டை கேட்க ஆரம்பித்தான்.

என்ன இந்த ஊரில் இருக்கும்? என்ன ரகசியம் இருக்கும்? என யோசித்தபடியே தன் வானொலியில் பாட்டினை கேட்டுக்கொண்டிருந்தான்.

வானொலியில் ஒரு செய்தி பாட்டின் இடையில் அந்த செய்தியை கேட்ட உடனே
அன்பு அச்செய்தியை மிகவும் உன்னிப்பாகக் கேட்க ஆரம்பித்தான்...

என்ன செய்தியாக இருக்கும் அந்த ஊரின் செய்தியாக இருக்குமோ? அவனின் குழப்பத்திற்கு பதிலாக இருக்குமோ? அல்லது அவ்வூரின் ரகசியமாக இருக்குமோ? அல்லது அவ்வூரின் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு செய்தியாக இருக்குமோ பார்ப்போம்...,

எழுதியவர் : உமா மணி படைப்பு (1-Jan-19, 10:40 pm)
சேர்த்தது : உமா
Tanglish : ragasiyam
பார்வை : 245

மேலே