நீங்கள் கேட்டவை

நேரம் போவது தெரியவில்லை
உறங்க மறுக்கும் கண்கள்
காற்றலையில் தவழ்ந்து வரும் கானம்
இலேசாக வருடி விடும் ராகம்
நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில்
நெஞ்சைத் தொடுகிறது பாடல்

பழைய பாடல்களின் பவ்வியம்
காதலின் இரகசிய சிந்தனைகளில்
உலாவரும் எண்ணங்களை
மீண்டும் தேடிட முடியாத வரிகளில்
அற்புதமான பாடல்கள்

என்ன என்ன அனுபவம் வாய்ந்த
சிந்தனைக் கவிஞனின் பண்பட்ட சிந்தனைகள்
புண்பட்ட மனங்களையும்
தேற்றிடும் முதிர்வுள்ள பாடல்கள்
முத்தாக அவை எம் சொத்தாக
வந்து வந்து எம்மை சொக்க வைக்கும் இனிய ராகங்கள்

இலேசாக இலேசாக உள்ளமெல்லாம் வருடி
இமைகளை உறங்க வைத்து
தூங்கிட தாலாட்டும் தொட்டில் அது
வானொலியில் நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியே .
நாம் உறங்கும் நேரமெல்லாம்
அந்தப் பாடல்கள் எண்ணங்களில்
உறங்காது ஒலித்துக் கொன்டே இருக்கும்

எழுதியவர் : பாத்திமாமலர் (2-Jan-19, 3:23 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 169

மேலே