மலர்விழிப் பார்வையள் மார்கழிக் காலை

மலர்விழிப் பார்வையள் மார்கழிக் காலை
அலர்தா மரைஇன்னும் பூவிரியாப் போதில்
புலர்காலைப் பூவாய்பூ ஏந்தி வருவாள்
கலர்க்கண்ணன் கோயிலில்பா வை .

---ஒருவிகற்ப இன்னிசை வெண்பா .
வாய்விட்டுப் படியுங்கள் வெண்பா ஏன் இனிமை அழகு
என்று புரியும்.
நளனுக்கு நானூறு எழுதி புகழேந்தியவன் பாவன்றோ அது .
பாமரனுக்கும் பா சொன்ன அவ்வையின் வழியல்லவோ அது !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jan-19, 10:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே