கோப பார்வையோடு ஒரு முத்தம் கொடடி 555
என்னவளே...
நாம் கைகோர்த்து நடந்த
அந்த அழகிய புல்வெளியில்...
உன்னிடம் நான் முதன் முதலில்
முத்தம் ஒன்று கேட்டேன்...
என்னைவிட்டு
விலகி அமர்ந்து...
காதல் கலந்த
கோபப்பார்வையோடு...
உன் கண்களை
அகலவிரித்து...
உன் கன்னங்கள்
இரண்டும் சிவக்க...
ச்ச்சீ போடா என்றாய்...
அந்த வார்த்தை என்னை
ரொம்பவும் நெகிழவைத்தது...
அழகிய உதட்டினை
கோபமாக வைத்துக்கொண்டு...
வேணுமா என்றாயே
செல்லமாக...
நீ மறந்துவிட்டாயோ
என்னுயிரே...
இன்று மீண்டும் அப்படி
ஒரு முத்தம் கொடடி எனக்கு.....