புள் சிலம்பவில்லை

விடியுமுன் எழுந்து நீராடி
நல்லாடை உடுத்தி
குடலைப் பின்னல் குழலில்
மல்லிகை மலர் சூடி
பாவையர் பாடினர் கோவிலில்
விடியும்போது கூவும் கோழி
கூரையில் கூவவில்லை
ஏனென்று கேட்டாள் ஒருத்தி
கொட்டாவி வாய்திறந்து
விடியுமுன் உன்னனையப் பாவையர்
ஆலயம் சென்று ஓங்கி அளந்த
உத்தமன் புகழ் பாடிய பின்
புள் சிலம்பத் தேவையில்லை
எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ
என்று ஏளனமாய் வினவியது காலைக் கோழி !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jan-19, 9:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே