யாதுண்டு எம் மொழியில் ஏற்றுதற்கே

யாதுண்டு எம் மொழியில் ஏற்றுதற்கே ?
****************************************************************
பாலுண்டு பண்தந்த பிள்ளையெங்கே ? மெய்யன்பால்
ஆலுண்டான் அடிபணிந்த அப்பரெங்கே ? நாவலூரின்
மேல்வந்து தடுத்தாண்ட நண்பனெங்கே ? வெள்ளமே
போல்வந்து காத்தவாத வூரரெங்கே ? யாமெங்கே ?

அப்பரும் பிள்ளையுமாய் அப்பனைப் போற்றியபின்
ஒப்பரும் சுந்தரரும் செப்பரும் வாசகரும்
தப்புறுமிப் பிறவிபோக்கத் தண்தமிழைத் தந்தபின்னும்
அப்புறமாய் யாதுண்டு என்மொழியில் ஏற்றுதற்கு ?

எழுதியவர் : சக்கரைவாசன் (7-Jan-19, 5:33 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 126

மேலே