உந்தன் பார்வை

உன்னழகைக்கண்ட கவிஞன் நான்
கவிதையால் உனக்கொரு காவியம்
பாட வந்தேன் , உந்தன் விரிந்த
வட்ட தாமரை விழிகளைக்கண்டேன்
அது தந்த தீர்க்க பார்வையில் என்னை இழந்தேன்
மலருக்கு மயங்கிய கருவண்டுபோல
பல காவியங்கள் அந்த பார்வையில் கண்டுகொண்டேனடி
இன்னும் எனக்கெழுத என்ன இருக்கிறது
மங்கையரின் விழிப்பார்வைக்கு .
காவியங்கள் உன் விழிகள் என்று நான் கண்டபின்னே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jan-19, 6:50 pm)
Tanglish : unthan parvai
பார்வை : 339

மேலே