ஆசிரியை


ஆசிிிரியை


கரு சுமந்தவளுக்கு

மனிதத்தின்

படையல்

பூமி.


கால்விரலில்

காலமெல்லாம்

கனக்கிறது

காலம்.


முதுகு நாணில்

எரிகிறது

குழம்புகள்.


அண்டத்தின்

வாய்ப்பாடு

அறிந்த

ஆசிரியை.


மனிதனை

துறவறம்

பூணாமல்

காக்கும்

பூ.


இன்று

இறை

கருவறை

காண

எத்தனை எத்தனை

வேலிகள்.


படைத்தவள்

படைக்கப்பட்டவனை

பார்ப்பது

பாவமோ?


அணுக்களில்

நிறைந்தவள்

உறைந்தாளே...


பிரித்தது

மதமா

மதமா?


இறையளுக்கே

இல்லாவிட்டால்

எதுவானாலும்

இருந்தென்ன...?

இல்லாமல்

போனால் தான்

என்ன?


- எழில்

எழுதியவர் : சாமி எழிலன் (8-Jan-19, 7:08 am)
சேர்த்தது : Saami Ezhilan
Tanglish : asiriyai
பார்வை : 89

மேலே