ஜாதியில் என்ன இருக்கு?
⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔
*சமுதாயக் கவிதை*
*கவிஞர் கவிதை ரசிகன்*
⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔
உயர் ஜாதிக்காரன்
போகின்ற கோவிலுக்கு
கீழ்சாதிக்காரன்
போவதை தீட்டு என்று
சொல்பவர்கள்....
கீழ் ஜாதிக்காரன் போகின்ற
அரசு மருத்துவமனைக்கு
மேல்சாதிக்காரன்
போகின்றார்களே...!
ஐயோ தீட்டு.....!!!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தெய்வத்திற்கு
தங்கத்தில் ஆபரணங்கள்
அணிவித்தால்தான்
மகிழ்வார் என்று சொல்கிறார்கள்....
அப்படியானால்
கோவில் நகைகள்
திருட்டு போன போது
ஏன் தெய்வம் அழுவவில்லை...???
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
அரசாங்கம்
மக்களின்
நியாயமான கோரிக்கையை
அலட்சியம் செய்வது....!
மக்கள்
கடையடைப்பு
வாகன எரிப்பு
பேருந்து சிறைப்பிடிப்பு
கட்டிடம் இடிப்பு
தீக்குளிப்பு
கோடிக்கணக்கில் இழப்பு
அப்புறம்தான் வருகிறது
அரசுக்கு பொறுப்பு...
மக்களுக்காக
அரசியல் செய்த காலம் போய்
மக்களையே வைத்து
அரசியல் செய்யும் காலம்
வந்துவிட்டது.....!!!
கவிதை ரசிகன்
⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔