பொங்கல் வாழ்த்து

ஆடி விதைத்த விளைச்சல் பருவம்
தையில் தேடி புதுஅரிசி எடுத்து
புது பானையிலிட்டு சூரியன் காண
பொங்கிடும் நீரை பூமியில்விட்டு
கூவிடுவாறே பொங்கலோ பொங்கல்
மார்கழி மாதம் உண்ணா பெண்டீர்
தையில் குளத்தில் சேர்ந்து குளித்து
பொங்கல் உண்டு நோன்பு கழிக்கும்
பண்டிகை இதுவென நற்றிணை பாடி
இஃதுதமிழர் திருநாள் என்பதை அறிக
நம் வாழும் வாழ்வில் இரண்டரக்கலந்த
இயற்கைக்கு சொல்லும் நன்றி இதுவே..

இன்று பொங்கும் பொங்கலென உங்கள் உள்ளங்கள் மகிழ்ச்சியை என்றும் பொங்க எனது தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

எழுதியவர் : பால தமிழ் கடவுள் (15-Jan-19, 12:20 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : pongal vaazthu
பார்வை : 107

மேலே