இயற்கை அன்னாய் எங்கே போனாய்
இயற்கை அன்னாய்!
எங்கே போனாய்?
பல்வண்ணச் செடிகள்! பூக்கள்!
பனிபோர்த்தும் வயல்கள்! தோட்டம்!
புல்பண்ணை! ராகம் பாடி
போட்டியிடும் புள்ளி னங்கள்!
கல்மண்ணால் ஆன வீடு!
காடுவளம்! எதையும் காணோம்?
சொல்லொண்ணா சுரண்டல் செய்தே
தொலைத்திட்டோம் இயற்கை அன்னை!!
மா.அரங்கநாதன்