தமிழகம் ஒரு புண்ணிய பூமி
ஆலயக் கோபுரங்களும்
அந்தணர் வேள்வித் தீயும்
உயர்ந்து நிற்கும்
ஆலய மணி ஓசையில்
ஓம் எனும் நாதம் என்றும் ஒலித்திருக்கும்
காவிரியும் தாமிரவருணியும்
தெய்வீக ஆன்மீகத் தென்றல் தவழ ஓடும்
பாவை வரிகளை பாவையர் பாங்குடன் பாடிட
பக்திகீதம் காற்றினில் கலந்து வரும்
தமிழகம் ஒரு புண்ணிய பூமி !