குறிஞ்சி மலர்ந்தது
பொதிகை மலைச்சாரலில்
மலர்ந்தது நீலக் குறிஞ்சி
சென்ற மாமாங்கத்தில்
துலைந்துபோன என் பிள்ளை
எனக்கின்று கிடைத்துவிட்டான் !
குறிஞ்சி மலர மலர்ந்தது
எங்கள் வாழ்வும்.