நாணல் நான் - காதல் டாபிக் - 2004

கயிறறுந்த நாணலாய்
என் உயிர்
உன் ஆராதனைக்குப் பின்னால்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
உன்னை நினைக்கும்போதெல்லாம்
என்னுள் நான்
பலமுறை பிறக்கிறேன்
உன் கை என்னில்பட்ட அந்த முதற்தருணமே
பரிசுத்தமடைந்துவிட்டேன்
மதியலை மிதக்கும் நனவோடைக் கீற்றுகள் மேல்
தட்டாமாலை சுற்றினேன் நான்
மென்சோகம் இழையோட
யுகங்களின் அழகில் மிளிர்ந்த உன் முகமும்,
விரல்கள் பூத்தொடுக்கவழிந்த
உன் குரலின் வசீகரமும்
என்னை உன்வசம் சரியச்செயகிறது
அடிக்கடி நம் உரையாடலின் நடுவே
நீ சொல்லிக்கொள்ளும்
"ஆமாவா" என்னுஞ் சொல்
என்னை முற்றிலுமாய் கிறங்கவைக்கிறது

உன் பெயரெழுதப்பட்ட நீலநிற மையையும்
முதல் முறை
நேசிக்கத் தொடங்கியிருந்தேன்,
நீலநிற மை யின்
இழையோடிய எழுத்துகளின்மேல்
ஒரு பிறைநிலா,,!!
இதுவரை நிமிர்ந்துநாணாத நிறைநிலா,,!!
இருளும் ஒளியும் அற்ற என் உலகில்
இரவும்பகலுமாக
நான் ஏந்தி தடம் காட்டபோகும் தனிநிலா
என்னில் நீ ,,,,!!


அனுசரன்)

எழுதியவர் : அனுசரன் (17-Jan-19, 3:49 pm)
பார்வை : 175

மேலே