அமராவதியை கம்பரின் மருமகளாக்க

சிலப்பதிகார இளங்கோவை அழைத்து

சிறப்பாட்சி செய்த இராஜராஜனுடன் இணைத்து

இயல் இசை நாடகத் தமிழுக்கு திருமுழுக்கு செய்து

களை போல் கலந்துள்ள கலப்பட மொழி களைந்து

கட்டுவோம் புது கட்டுப்பாடான தமிழை !


புலவர் மாமூலனை அழைத்து

மாமனிதன் வள்ளுவனின் பெயரதனைக் கேட்டு

திறம் மிக்கோனின் உருவந்தனைப் பார்த்து

இமயமலையுச்சியில் அதையும் சிலையாய்

எழுதியவர் : நன்னாடன் (18-Jan-19, 3:51 pm)
பார்வை : 166

மேலே