காதல்

சிறு நகைக்கூட தாரா
உந்தன் அழகு முகம் பெண்ணே
அலைகள் ஆர்பரிக்கா கடலைப்போல
ஒளி இல்லா திங்களைப்போல இருப்பதேனோ
அதனால் , பெண்ணே உன் மௌனத்தை நீக்கி
என்னவளாய் என் காதலியாய் என்முன்னே
வந்து, உந்தன் செவ்விதழைகள் திறந்து
புன்னகையும் தந்து என்னருகே வந்து
உன்னவன் நான் உன் காதலனாய் இருக்க
என்னை கட்டி அனைத்துக்கொள்ளடி
தயக்கம் ஏதும் கொள்ளாது உன்னை நான்
காத்திருப்பேன் காலமெல்லாம் காதலியாய்
நாளைய என் வதுவாய்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jan-19, 9:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 268

மேலே