மெரீனா

மெரீனா
===========================================ருத்ரா

காதல் என்றால்
அதன் குப்பைத்தொட்டி
மெரீனா.
ஏனெனில்
அங்கே தான்
காதல் கடிதங்கள்
எல்லாம்
"பழைய பேப்பர்" கடைகள்
வழியாய்
சுண்டல் மடிக்க
வந்து விடுகின்றன.
பாருங்கள் அவள் வருவதற்காக
காத்திருக்கும் போது
சுண்டல் சாப்பிட வாங்கிய
காகிதத்தில்
என் கையெழுத்து.
அன்புடன்..
என்று என்னைகாட்டிக்கொடுத்தது.
என் ஒவ்வொரு கடிதமும்
பொக்கிஷம்
என்று சொன்னவளையும்
காட்டிக்கொடுத்தது.
அவள் வந்தாள்
காட்டினேன்
இங்கே எப்படி வந்தது?
நானும் கேட்டேன்
அவளும் கேட்டாள்.
சரி விடுங்கள்.
இதயத்துள் இதயம்
விழுந்த பின்
இந்த காகிதங்கள்
எங்கே கிடந்தால் என்ன?
என்றாள்.
ஆம்
அவை நான் அந்தக்கடித்தில்
எழுதியிருந்த வரிகள்!

=======================================

எழுதியவர் : ருத்ரா இ paramasivan (21-Jan-19, 12:22 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 41

மேலே