காதல்

அவள் மீது என் பார்வை விழுந்தது
எதேர்ச்சை- விதியென்றும் கூறலாம்
என் மீது அவள் பார்வை அதற்கு விடையாக
அதுவும் ஓர் சுகமான பார்வை- இதுவும் விதியே என்பேன்
இப்படி சேர்ந்த பார்வை நேசம் தந்ததும் விதியே
நேசத்தில் விளைந்ததோர் அன்யோன்யம்
மோகமுள்ளாய்த் தைக்க , காமம் சுரக்க
காமத்தில் தோய்ந்து நீந்தி வர காதல்
உள்ளத்தில் புகுந்தது நல்லதோர் உறவாய்
அன்பின் எல்லையாய் எங்களை
நலம்பெற பேணி உயிருள்ளவரை காக்க

எழுதியவர் : வச்சவன்-தமிழ்பித்தன்-வாச (21-Jan-19, 2:44 pm)
Tanglish : kaadhal
பார்வை : 440

மேலே