தைப் பூசம்

இன்று முருகனுக்கு பெரும் விழாவாம் /
தெருவெங்கும் வெள்ளி ரதம் உலாவாம்/
கோலகலமான கொண்டாட்டமாம் /
கோலலம்பூரிலும் மக்கள் கூட்டமாம் /

போக்கு வரத்து பெரும் நெருசலாம் /
பாதை எங்கும் சிதறு தேங்காய்க் குபியலாம் /
வீதியெங்கும் அணிவகுக்கின்றது தண்ணீர்ப் பந்தலாம் /
கையை நீட்டிப் பெற்றுக் கொண்டால்
தட்டி விட்டு நுழைகின்றார்களாம்
மந்தை போல் மனிதர் கூட்டமாம் /

ஆறு முகனுக்கு பாலால் அபிசேகமாம் /
இவை தைப் பூசத் திரு நாள் விசேசமாம் /
படியேறி பாத யாத்திரைப் பயணமாம் /
பாலகன் முருகனிடம் பக்திப்பரவசத்துடன்
வைக்கின்றனர் சிறு வேண்டு கோளாம் /

தைப் பூசத் திரு நாள் வாழ்த்துகள் ❤🙏

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (21-Jan-19, 7:23 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 47

மேலே