ரோஜாவாய் நடக்கும் தேவதையே

பாலில் மூன்று தெளித்த
------பாவலன் திருக்குறளோ
தேனில் திளைத்து மகிழும்
-------தோட்டத்து புதுமலரோ
பழத்தில் நன்கு சிவந்த
---------சிரிக்கும் மாதுளை முத்துக்களோ
பார்வை இரண்டும் என்ன
---------கவிழ்ந்த வானத்தமுதக் கலசமோ
பாலையாய் விரிந்த வீதியில்
---------ரோஜாவாய் நடக்கும் தேவதையே !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jan-19, 7:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே