அரியாசனம்

ஆசையில்லை
அரியாசனத்தில்
அமர்ந்திட எனக்கு !

ஆளும் திறமையும்
அற்றவன் என்பதை
அறிவேன் நானும் !

ஆளுகின்றவர்க்கும்
ஆண்டவர்களுக்கும்
போட்டிதான் இன்று !

ஆண்டிகளும்
ஆளுகின்ற நிலை
உருவான உலகமிது !

எதிர்வரும் காலம்
எப்படி என்பதே
கவலை எனக்கு !

எதிர்நோக்கி
காத்திருக்கும்
ஏக்கமுள்ள நெஞ்சங்களில்
நானும் ஒருவன் !

பழனி குமார்
23.01.2019

எழுதியவர் : பழனி குமார் (24-Jan-19, 7:45 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 480

மேலே