பலமாகும், பாலமாகும்

இரு உள்ளங்கள் சேர்ந்துதான்
அன்பு என்ற வார்த்தைக்கு
பொருள் கிடைக்கிறது
அன்பு எந்த வடிவத்திலும் உருவாகலாம்
அன்னை, தந்தை, குழந்தைகள்,
சகோதரர்கள், நண்பர்கள்,
காதலர்கள், கணவன் மனைவி ,
எல்லா உறவிலும் அன்புமட்டுமே
இணைக்கும் பலமாகும் பாலமாகும்
இவ்வன்பு உயர்வான இயற்கையின் வரம்
நாம் அன்பைத் தேடி போவதில்லை
தன்னாலே உருவாகிதன்னையே கொடுத்து
தியாகியாகி நம்மிலே உயிராகி உள்ளமதில் ஊன்றி
நம்மை ஆட்கொள்ளும் நம்பிக்கையே அன்பு .
அன்பு சுயநலமற்றது, தன்னடக்கமுள்ளது
ஒருவருக்காக இன்னொருவர் ஏங்கும் ,
ஒருவர் சுமைகளை இன்னொருவர்
தாங்கும் வலிமை மிக்கது
உண்மை அன்பை உணர்ந்திட்ட எவர்க்கும்
தோல்வியில்லை . சோர்விலே நிலைப்பதுமில்லை
அன்பு இறைவனின் சாயல்
அன்பு மனிதனின் அடித்தளம்

எழுதியவர் : பாத்திமாமலர் (24-Jan-19, 11:50 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 105

மேலே