அழகிய பருவம்

கண்களுக்குள் பருவம்
எழில் கொஞ்சும்
கன்னியின் பார்வையில் ,
காளைக்கும் கவி சொல்லும்
இலேசான மயக்கமும்
தூறல்போல் சலனமும்
வியத்தகு நிலைகளன்றோ ,
ஆசைகள் அரும்பும் அற்புத காலத்தில்
அவளுக்கென்று மனமும்
அவனுக்கென்றோர் மனமும்
அடையாளம் தெரிகின்றது .

எண்ணங்கள் மலர்கின்றன
எங்கெங்கோ பறக்கின்றன ,
இடையினில் பாரமற்ற உள்ளங்கள் ,
யாரறிவார் யாருக்கு யாரென்று
பஞ்சுமனங்களில் பற்றிக் கொண்ட
அழகிய பருவமிது ,புரியாத புதிர் இது, .
அஞ்சுகின்ற அமைதியான
அழகான பருவமிது .
உள்ளத்தில் சொரக்கமதை
தொட்டுநிற்கும் காலம் இது .

எழுதியவர் : பாத்திமாமலர் (25-Jan-19, 12:58 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : alakiya paruvam
பார்வை : 213

மேலே