பரந்தாமன்

பை நிறையப் பணமிருந்தாலும்,
மனம் நிறைவு என்றாகுமா?
குணம் நிறையப் பெற்றிருந்தாலும்,
பை நிறைக்கப் பணமாகுமா?

இருப்போரிடையே எல்லாம்
நலமே என்ற நினைப்பதும்,
இல்லாதோரிடம் எதுவும்,
இல்லை என்று கொள்வதும்,
அறியாமையின் உச்சமாகும்.

இருப்போரும் வாழ்கின்றார்,
இல்லாதோரும் இருக்கின்றார்,
கொடுப்பது அவன் செயல்
காப்பது அவன் வழி.

படியளப்பான் ஈசன்,
பகுந்தளிப்பான் நேசன்,
தகுதியறிந்து தந்திடுவான்,
பார்தறியா பரந்தாமன்.

எழுதியவர் : arsm1952 (25-Jan-19, 4:49 pm)
சேர்த்தது : arsm1952
Tanglish : paranthaaman
பார்வை : 34

மேலே