காதலில் தொலைந்தோம்

துகில் போன்ற சேலையில்
தேவதை போல் கன்னி
எப்படி வர்ணிக்க அவள் எழிலை
இவளை ஏன் இப்படி /
இறைவனின் திருவிளையாடலில்
இதுவும் ஓன்று.
எந்த சிற்பியும் செதுக்கிட இயலாத
தேவலோக கன்னியவள்.
என் கண்கள் அவளை உற்று பார்த்துக்
கொள்ளை கொண்டது அவள் அழகை
ஆகா / ஒரு சிறு புன்னகை அவள் இதழோரத்தில்,
அப்புன்னகை பதிந்தது என் இதயத்தில்,
அழகிய ஓவியமாய் .
வேக வேகமாய் என் இதயம் அதை
ஏற்றுக் கொண்டதை நினைத்து
மெய் சிலிர்க்கின்றது.
அவள் புன்னகை என் இதயத்தில்
அழகிய இதழ்களாக பூத்துக் கிடக்கிறது.
இதழ்கள் என்னிடத்தில் பதித்தவள்
சும்மா இருப்பாளா என்னை சுற்றியே
வளைய வருகின்றாள் ,
அப்போதுதான் புரிந்தது என் கண்களும்
அவள் இதயத்தில் புகுந்து விட்டதை .
இருவரும் காதலில் தொலைந்தோம். .

எழுதியவர் : பாத்திமாமலர் (30-Jan-19, 9:30 pm)
பார்வை : 344

மேலே