i விதித்தது யாரோ

விதித்தது யாரோ ?
***********************************

விண்அதிர வான் ஆய்ந்தும் மண் நகரத் தாங்கலையே இதனை யார் விதித்தது
விண்ணிலே தேங்கிவிட நீருக்கு வழியில்லை இதனை யார் விதித்தது
கொள்ளையில் கல்வியும் கொள்ளைநோய் வைத்தியம் இதனை யார் விதித்தது
ஒரு பள்ளி கல்விக்கும் மறு பள்ளி கலவிக்கும் இதனை யார்விதித்ததோ
அமைதியான பக்தியோ பரவசமாய்ப் போனது இதுவும் யார் விதித்ததோ
ஒரு நங்கை கற்புக்காய் மறு மங்கை ஏற்புக்காய் இதனை யார் விதித்ததோ
இருப்போர்க்கு புத்தியில்லை இல்லார்க்கு கல்வி இல்லை இதனை விதித்தது யாரோ
பொய்யே அது மெய்யாம் மேயும் அதும் பொய்யாம் இதனை யார் விதித்தது

விதித்தது அயனெனில் காப்பது மாலாம் அழிப்பது என்னவனே

எழுதியவர் : சக்கரைவாசன் (1-Feb-19, 8:02 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 84

மேலே