நாளை நிஜத்தில் வந்துவிடடி 555
என்னவளே...
உன்னுடன் நடைபோட்ட
நாட்கள் எல்லாம்...
என் தனிமையில்
நினைவலைகளாக...
தினம் தினம் ரசித்து
கொண்டு இருக்கிறேன்...
கண்மூடி கட்டிலிலே
நான்
அயர்ந்து தூங்கினாலும்...
நித்திரையில் உன்னை கண்டு
நான் ரசிக்கும் போதெல்லாம்...
நிஜத்தில் நீ வந்துவிட்டாயோ
என்று துள்ளி எழுகிறேன்...
அந்நேரம் என்
கைகளில் இருப்பது...
என் கைபேசியின்
முகப்பில் இருப்பது...
உன் புகைப்படம்
மட்டும்தானே என்னுயிரே...
நித்திரையில் வந்தவளே
நாளை நிஜத்தில் வந்துவிடடி...
என் விழி அழகே.....