இல்லை என்பதொன்றே உண்மை
பாசம் என்றும்
பந்தம் என்றும்
இங்கு ஏதுமில்லை …!!
கனா கானா
நெஞ்சில் என்றும்
காயம் வருவதில்லை... !!
கிடைத்த உறவு என்பதும்
வரும் நட்பென்பதும்
நிரந்தரமில்லை... !!
வான் முகில் போல்
வாழ்வு என்றும்
நிலைப்பதில்லை.. !!
பணம், பதவி
படுத்தும் பாடு
கொஞ்சம் நஞ்சமில்லை.. !!
இறுதி யாத்திரை செல்லும்
பொழுது நெற்றிக்
காசுகூட உனதில்லை.. !!
வணங்கும் இறை
என்பது ஆலயத்தில் உள்ள
சிலையில் இல்லை…!!
வாங்கும் பணம்
கோடி கொடுத்தாலும்
கடந்த நாட்கள் திரும்புவதில்லை ..!!
காதலது காற்று போல
ஒருவரிடம் மட்டுமே
தங்குவதில்லை...!!
வாழ்ந்த வாழ்வென்பது
சேர்த்த சொத்திலும்
பெற்ற பிள்ளையிலுமில்லை..!!
உடலுக்குள் சென்ற
காற்று வெளி வராவிடில்
இவ் உடலில் உயிரில்லை..!!
இல்லை என்பது மட்டுமே
இருக்கு என்பதை உணரும்
மனதில்
துன்பம் ...ஏக்கம் ..கவலை
என்றும் இல்லவே இல்லை ..!!
என்றும் ...என்றென்றும் ..
ஜீவன் ✊✊