குமரிப் பெண்ணின் உள்ளத்திலே

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே..!!
`````````````````````````````````````````````````````
சலங்கையொலி சிரிப்பினிலே
சந்தக் கவிதை ஒலிக்கிறது
இந்த சிரிப்பில் இலயித்ததிலே
வந்த கவிதை இனிக்கிறது...!!

தன்னை மறந்து சிரித்திருக்க
யாரெவர்தான் உரைத்ததென்ன
கூறடி என் தேவதையே
நானும் கொஞ்சம் களித்திருக்க..!!

பிணி தீர்க்கும் நல்ல மருந்து - நானும்
சிரித்திருப்பேன் உன்னைத் தொடர்ந்து
கேலி சிரிப்பு நமக்கெதற்கு - இந்த
கிள்ளை சிரிப்பில் அழகிருக்கு..!!

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
கொட்டிக்கிடக்கும் சிரிப்பு கிடங்கில்
எனக்கு கொஞ்சம் இடமும் கொடு
இளைப்பாறிக் கொள்ளவேன் தடையை எடு..!!

எழுதியவர் : சொ.சாந்தி (3-Feb-19, 3:19 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 117

மேலே