அறிவியலாய் நீ எனக்கு
கானல் நீரில் உன் முகம் பார்த்தேன்..
இயற்பியல் விதிமுறைகள் மறந்தன எனக்கு...
என் வேதி வினையில் உன்னை பார்த்தேன்...
வேதியியல் சமன்பாடுகள் மறந்தன எனக்கு...
பூக்களின் இடையில் உன்னை நுகர்ந்தேன்...
தாவரவியல் பெயர்கள் மறந்தன எனக்கு...
அன்னப்பறவையாய் உன்னைக் கண்டேன்...
விலங்கியலின் அடையாளம் மறந்தன எனக்கு....
ஆக மொத்தம்
அறிவியலாய் நீ எனக்கு...
முடிவிலியாய் நான் உனக்கு....